இடுகைகள்

உங்கள் பெயரின் கணியக்கலை இயல்பு அறிய ஆர்வமா?

படம்
உங்கள் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் உங்களுக்கு ஓர் இயல்பு உங்கள் பெற்றோரால் அடையாளமாக்கப் பட்டிருக்கிறது. உங்களாலும், மற்றோராலும் உங்கள் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்களுக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்தும்  வேறு  வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும்.  ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில்,  பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?   அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் எனது வாழ்த்துக்கள். உங்கள் இயல்பு என்ன? அற

பங்குச்சந்தை வருமானம்

படம்
பங்குச் சந்தையின் அடிப்படைதான் முதலீடு. ஆனால் பங்கு சந்தையின் போக்கு முதலீட்டுக்கு ஆதாயம் பார்க்கிற வகைக்கு இல்லை. பெரும்பாலான பங்குகளில் முதலீடு செய்து விட்டு ஒரு மாதம் கவனிக்காமல் விட்டாலே, நீங்கள் வாங்கிய பங்கின் விலை சரிந்து, உங்கள் முதலீட்டில் கொஞ்சம் விழுக்காடு காணாமல் போயிருக்கும். பங்குச் சந்தையில் ஆதாயம் பார்க்க முதலீடு செய்யக்கூடாது. சேமிக்க வேண்டும். பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் உறுதியாக ஆதாயம் பார்க்க முடியும். இந்த வகையான வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும். நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்லதொரு பங்கை தேர்ந்தெடுத்து அந்தப் பங்கில் மட்டும் வணிகமாடலாம். விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான

பெண் குழந்தைகளுக்கான பெயர்கள். (கணியக்கலைஅடிப்படையான இயல்புகள், இயல்பு எண்களுடன்)

படம்
பெண் குழந்தைகளுக்கான இயல்பான தமிழ்ப் பெயர்கள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. ஒவ்வொரு பெயருக்கும் கணியக்கலை அடிப்படையிலான இயல்பும், இயல்பு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கணியக்கலை என்றால் என்ன என்கிற கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. அமேசான் கிண்டில் பதிப்பில் இதுவரை எனது பதினெட்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும்.  புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது. இந்த நூலை வாங்குவதற்கான அல்லது படிப்பதற்கான  இணைப்பு 

மின்சாரம் இனிய தமிழில்! என் மூன்றாவது மின்நூல்

படம்
மின்சாரம், என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் எடுப்பது போல் வேறு எது எதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும்? நம் உடலில் கூட மின்சாரம் இருக்கிறதாமே? மின்சாரத்தை சேமிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுவது இயல்புதான். அதற்கு முன்னால் மின்சாரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமேயானால் அதிலேயே இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். அதற்கான ஒன்பது கட்டுரைகளுடன் இனியதமிழில் முன்னெடுக்கப்பட்ட நூல் இது. மின்சாரம் கட்டுரை ஒன்று, மி;ன்சாரத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கும். மின்சாரம் கட்டுரை இரண்டு, மின்சாரத்தின் உற்பத்தி முறைகள் குறித்து விளக்கும். மின்சாரம் கட்டுரை மூன்று, மின்சாரம் என்றால் என்ன? என்பது குறித்து விளக்கும் வகைக்கானது ஆகும்ஃ மின்சாரம் கட்டுரை நான்கு, மின்வாரியத்தால் நமக்கும் மின்சாரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்தது ஆகும். மின்சாரம் கட்டுரை ஐந்து, பெரும்பாலும் பேரளவு மின்சாரம் உலகம் முழுவதும் ஒரே அடிப்படையில்தான் தயாரிக்கப் படுகிறது என்பதை விளக்குவது ஆகும். மின்சாரம் கட்டுரை ஆறு, சூரிய ஒளியல் இருந்து மின

நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என் இரண்டாவது மின்நூல்

படம்
மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை ஆகும். மற்ற ,ரண்டு கலைகளில் முதலாவது சோதிடம், சாதகம் உள்ளிட்ட நிமித்தகம் ஆகும். ,ரண்டாவது கணியம் ஆகும். மந்திரக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம்.   உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை ,ப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். இந்தக் கலையின் அடிப்படையை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் எல்லையில்லாத முன்னேற்றத்தை முன்னெடுக்க ,ந்த நூல் உதவும். அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள ,ந்த நூலை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி எப்போது வேண்டுமானலும்

என் மின்நூல்! குமரிநாடன் கட்டுரைகள்

படம்
நான் வெளியிட்ட முதல் மின்நூல் குமரிநாடன் கட்டுரைகள் என்ற நூல் ஆகும். இந்த நூலை அச்சுப்பதிப்பாகவும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல், நான் மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்டு வந்திருந்த இருபது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். குமரிநாடன் கட்டுரைகள் அச்சு நூலுக்கு அசிரியர் அறிமுக உரை வழங்கியிருந்தவர் பாவலர் செ.சி.இளந்திரையன் ஆவார்கள். அவரின் அந்த அறிமுக உரை:- 'குமரிநாடன் கட்டுரைகள்' நூலாசிரியர் குமரிநாடன், தமிழியச் சிந்தனை கொண்ட ஆகச்சிறந்த எழுத்தாளர். பள்ளி நாட்களிலேயே 'தமிழ்இயக்கம்' என்னும் அமைப்பைத் தொடங்கி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்ப் பணியாற்றியவர். தமிழியல் கல்வித்தளம் என்ற பெயரில் தாய்த்தமிழ் பள்ளியைத் தொடங்கி நடத்தி தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தியவர். 'விசும்பு' என்னும் மாதஇதழ் நடத்தி அதன்வழியாகப் பல படைப்பாளிகளை உருவாக்கியவர். தமிழ்நாட்டில் பல பருவ ஏடுகளிலும் தனது படைப்புக்களை பதியச் செய்தவர். மேட்டூர்த் தமிழ்ச்சங்கம், மேட்டூர் அனல்மின்நிலைய இலக்கிய வட்டம், கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராஜம்மாள் அறக்கட்டளை, கலை சிற்றிதழ், பன்னாட்டு தமிழுறவு மன்றம், மால

செல்பேசிகளுக்கான புளுடூத் செவித்தேன் கருவி! மிக மிக குறைந்த விலையில்

படம்
செல்பேசிகளுக்கான புளுடூத் இயர்பட்ஸ் வாங்கும் ஆசையை, இவ்வளவு விலையா? என்று, தள்ளிப் தள்ளிப் போட்டவரா நீங்கள்- இதோ அமேசான் உங்களுக்கு மிகச் சிறந்த தள்ளுபடியைத் தருகிறது உடனே வாங்க. அமேசானில் 80 விழுக்காடு வரை சிறப்பு தள்ளுபடி உள்ளதால், ஒரு நல்ல தயாரிப்பை இப்போதே கேட்பு கொடுத்து வாங்கலாம். இந்த புளுடூத் செவித்தேன் கருவியை நம் மிடுக்குப்பேசி மற்றும் மடிக்கணினியுடன் உடன் இணைத்து கொள்ளலாம்.  இது அதிகப்படியான ஒலிப்புத்திறன் தயாரிப்பு என்பதால், உங்கள் விருப்பப் பாடல்களை இனிமையாக கேட்கலாம். இந்த செவித்தேன் கருவி சுமார் 32 மணிநேரம் வரை செயற்படக்கூடியது.  2599 விலையுள்ள இந்த செவித்தேன் கருவியை தற்பொழுது அமேசானில் 598 ரூபாய்க்கு வாங்கலாம். 

விளையாட்டுக்கான நல்லதொரு மடிக்கணினி வாங்க!

படம்
  கடந்த ஆண்டு வெளிவந்த ஏசஸ் விளையாட்டு மடிக்கணினி குறித்து இங்கு விவரிப்போம். இது 15.6 அங்குல அளவிலான முழு எச்டி திரையைக் கொண்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த இன்டெல் கோர் ஐ5 10300எச் பிராசஸர் உள்ளதால், அதிவேகமான ஆற்றல் கொண்டிருக்கும் இந்த மடிக்கணினி. அதேபோல் 4ஜிபி ஜிடிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை உள்ளதால், நேரில் காண்பது போன்ற காட்சி இந்த மடிக்கணினியில் கிடைக்கும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது.

விலைக்குறைப்பு சலுகையோடு ஐந்தாம்தலைமுறை (5ஜி) சாம்சங் மிடுக்குப்பேசி!

படம்
சில நிறுவனங்கள் தரமான 5த மிடுக்குப்பேசிகளுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஒரு அசத்தலான 5த மிடுக்குப்பேசிக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.  ஐந்தாம் தலைமுறை இணையச் (5ஜி) சேவை அதற்கான அலைக்கற்றை ஏலங்கள் எல்லாம் முடிந்து விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.  தற்போது 5த பேசிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் சில செல்பேசி நிறுவனங்கள் அருமையான 5த மிடுக்குப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.  சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22 5த  ( Samsung Galaxy A22 5G ) மிடுக்குப்பேசிக்குத்தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது.  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளக சேமிப்பு ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப் பேசியின்  முந்தைய விலை ரூ.22,499- ஆக இருந்தது.  ஆனால் தற்போது இந்த வகைபேசியை ரூ.18,490- விலையில் வாங்க முடியும்.  அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளகசேமிப்பு ஆதரவு கொண்ட வகையின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.20,899- விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  சாம்சங் கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப்பேசி 6.6 அங்குல தொடு

சந்தைக்குப் புதுசு வரிசையில்! செல்பேசி

படம்
சாம்சங் கேலக்சி எம்13 வெளிர் பச்சை நிறத்தில். ரூபாய் 11999க்கு அமேசானில் கிடைக்கிறது.  தயாரிப்பு நிறுவனம்- சாம்சங் மாடல் எண் செல்லுலார் தொழில்நுட்பம்- நான்காவது தலைமறை (4ஜி) 6000 எம்ஏஎச் லித்தியம்-அயன் மின்கலம், சாதனத்திற்கான ஓராண்டு உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் வாங்கிய நாளிலிருந்து மின்கலம் உட்பட உள்ளீட்டு பாகங்களுக்கு ஆறு மாத உற்பத்தியாளர் உத்தரவாதம் 12ஜிபி ரேம் 64ஜிபி உள் நினைவகம் 1டிபி வரை விரிவாக்கக்கூடியது.  இரட்டை செறிவட்டை (நானோசிம்) 50எம்பி 5எம்பி 2எம்பி மூன்று லென்ஸ் கொண்ட பின்பக்க படப்பிடிப்புக் கருவி. முன்பக்கம்: 8எம்பி. ஆண்ட்ராய்டு 12, ஒன் யுஐ கோர் 4 மற்றும் சக்திவாய்ந்த ஆக்டா கோர் செயலி 16.72 சென்டிமீட்டர்கள் (6.6-அங்குலம்) தொடுதிரை. 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 16எம் வண்ணத்துடன் 401 பிபிஐ செல்பேசி.

எண்ணிமச் செலாவணி மூதலீட்டளர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியாவாம்!

படம்
உலக அளவில் எண்ணிமச் செலாவணியில் அதிகமான முதலீட்டாளர்களை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான எண்ணிமச் செலாவணி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உருசியா மற்றும் அமெரிக்க நாடுகளை விட அதிகமாகும். இந்தியாவில் 10.7 கோடி எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களும், அமெரிக்காவில் 2.78 மற்றும் உருசியாவில் 1.74 கோடி மக்களும் எண்ணிமச் செலாவணியில் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்தியாவில் எண்ணிமச் செலாவணிகளுக்கு சட்டப்பாடாக எந்த ஊக்குவிப்பும் இல்லை என்றாலும் மக்களுக்கு எண்ணிமச் செலாவணி முதலீடுகள் மீதான ஆர்வம் மிகுந்தே வருகிறது. புரோக்கர் சூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எண்ணிமச் செலாவணியை அதிக அளவு வைத்திருக்கும் தனிநபர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியர்கள் அதிக அளவில் எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களாக உள்ளதாக தெரிகிறது. மக்கள்தொகை அடிப்படையில் உலக அளவில் உள்ள எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உக்ரைன் 12.73 விழுக்காடு இரண்டாவதாக உருசியா 11.91 விழுக்காடு மூன்றாவது கென்யா 8.52 விழுக்காடு நா