பங்குச்சந்தையில் எவ்வளவு குறைந்த முதலீட்டிலும், அதற்கேற்ப ஆதாயம் பார்க்க முடியும்.
நீங்களாகத் தொழில் தொடங்கினால் ஒரேயொரு தொழில் நிறுவனம்தானே தொடங்க முடியும்!
பங்குச்சந்தை, பல தொழில் நிறுவனங்களில், நீங்கள் பங்கு பெற்று பாடாற்றுவதற்கான தளம் ஆகும்.
பங்குச்சந்தையில் எவ்வளவு குறைந்த முதலீட்டிலும், அதற்கேற்ப ஆதாயம் பார்க்க முடியும்.
மாதம் இரண்டாயிரம் வருமானம் பார்ப்பதற்கு ஓரு இலட்சம் வரை நீங்கள் வணிகத்தில் இறக்க வேண்டியிருக்கும்.
மாதம் இருபதாயிரம் வருமானம் பார்ப்பதற்கு பத்து இலட்சம் வரை நீங்கள் வணிகத்தில் இறக்க வேண்டிய தேவையிருக்கும்.
பங்குச் சந்தையில் மாதம் இருபதாயிரம் வருமானம் ஈட்டுவதற்கு நாம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ள பத்து இலட்சத்தை ஒட்டுமொத்தாக முதலீடு செய்யவெல்லாம் வேண்டாம்.
அதிகபட்சமாக ஒரு பத்து பங்குகளைக் காட்சிப் பட்டியலில் அமைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் நீஙகள் எதிர்பார்த்திருக்கிற வருமானத்தைக் கட்டாயம் ஈட்ட முடியும்.
ஒருவர் பங்குச்சந்தையில் மட்டுமே வணிகமாற்றி வாழ்க்கையைச் சிறப்பாகவே நடத்த முடியும்.
பங்குச்சந்தை வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும்.
நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்ல சில பங்குகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பங்குகளில் மட்டும் வணிகமாடலாம்.
விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான விலையுள்ள பங்குகளையோ தேர்வு செய்ய வேண்டாம்.
பங்குச்சந்தை வணிகமாடலுக்கு, நிறைய நிறைய தரவுகள் எல்லாம் கற்றுத்தேற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நான் பல ஆண்டு அனுபவத்தில் கற்ற இந்த வித்தையை உங்களுக்கு சில மணி நேரங்களில் கற்றுத்தந்து விடமுடியும்.
நீங்கள் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருந்தால் போதும். பெரிதாக தொடக்க முதலீடு எதுவும் தேவையில்லை.
நீங்கள் பங்குச் சந்தையில் இணைய, இந்த இணைப்பில் சென்று பதிவு செய்து கொண்டு பங்குசந்தை வணிகத்தில் ஈடுபடலாம்.
பங்குச்சந்தை இயங்கும் நேரம் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை மட்டுமே.
சனி, ஞாயிறு விடுமுறை. பொது விடுமுறை நாட்களில் பங்குச் சந்தை இயங்காது.
உங்கள் எந்த ஐயங்களுக்கும் என்னோடு தொடர்பு கொள்ள எனது மின்அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com
பங்குச் சந்தையில் இணைவதற்கு ஆதார் எண்ணும், வருமானவரி கணக்கு எண்ணும் கட்டாயத்தேவை ஆகும். மேலும் வருமானவரி கணக்கு எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டியதும் கட்டாயம் ஆகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்